தனித்து போட்டியா? கூட்டணியா? – மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேமுதிக – அமமுக.!

Published by
பாலா கலியமூர்த்தி

தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக – தேமுதிக கட்சிகள் இடையே பல கட்டங்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் தொடர்ந்து லுபாரி நீடித்து வந்தது. கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்து வந்த நிலையில், நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதன்பின், நாங்கள் கேட்ட தொகுதிகள், எண்ணிக்கைகள் அதிமுக தராததால் கூட்டணியில் விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்பான சூழலில் அறிக்கையை வெளியிட்டிருந்தார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியா? கூட்டணியா? என்று மீண்டும் மாவட்ட செய்யலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

இதனிடையே, அதிமுக கூட்டணியில்  இருந்து விலகிய தேமுதிக மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வருமாறு அக்கட்சி துணை தலைவர் பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து விரைவில் தேமுதிக தலைவர், பொருளாளர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த சமயத்தில் தேமுதிகவை தொடர்புகொண்டு அமமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவின் பழனியப்பன், மாணிக்க ராஜாவுடன் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, இளங்கோவன் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி தொடர்பாக எல்கே சுதீஷ் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

எனவே, தேமுதிக கூட்டணியில் இணையுமா? அல்லது சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில்,  140  தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று தேமுதிக வெளியிடுகிறது என தகவல் கூறப்படுகிறது. மேலும் யாருடன் கூட்டணி மற்றும் தனித்து போட்டியிடுவது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 hour ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago