மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கீடு -அரசாணை வெளியீடு

Default Image
  • சென்னை நந்தனம் பகுதியில் நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சென்னை நந்தனம் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதனிடையே நல்லகண்ணு பல ஆண்டுகளாக சென்னை தியாகராயநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த குடியிருப்பில் வசித்தவர்களை காலி செய்ய அரசு உத்தரவிட்டது. அப்போது அவர் வசித்து வந்த வீட்டை விட்டு காலி செய்தார். பின்னர் அக்குடியிருப்பில் பொது ஒதுக்கீட்டில் இருந்தவர்களுக்கு வேறு வீடு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்