சமீபத்தில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசனும், துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டனர்.
மேலும், மருத்துவர் சிவராமன், டிஆர்பி ராஜா உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினராக நியமனம் செய்யபப்ட்டுள்ளனர். இந்நிலையில், மாநில கொள்கை குழு உறுப்பினர்களுக்கான துறைகள் ஒதுக்கீடுசெய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத்தலைவர், உறுப்பினர்களுக்கு பொறுப்புகளை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, குழு துணைத்தலைவர்ஜெ.ஜெயரஞ்சன், உறுப்பினர் T.R.B. இராஜாவுக்கு வேளாண் கொள்கை, திட்டமிடல் பொறுப்பு ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. இராம. சீனுவாசனுக்கு திட்ட ஒருங்கிணைப்பு, ம. விஜயபாஸ்கருக்கு வேலை வாய்ப்பு பொறுப்பு , மு. தீனபந்து ஊரக வளர்ச்சி, மாவட்ட திட்டமிடல் , மல்லிகா சீனிவாசன் , தொழில்கள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து, ஜோ. அமலோற்பவநாதன், கு. சிவராமன் மற்றும் நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு சுகாதாரம், சமூகநலப் பொறுப்பு, சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் விவசாய நிலம் பயன்படுத்துதல் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் நியமிக்கப்பட்ட துணை தலைவர் ஜெயரஞ்சன் உட்பட 9 பேர் கொண்ட குழுவுடன் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…