ரஜினியுடன் கூட்டணியா ? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Default Image

நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவரிடம்,  நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள் செய்தியாளர்கள்.இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், இது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினி எந்த அடிப்படையில், இ-பாஸ் பெற்றார் என்பதை ஆய்வு செய்தால் தான் தெரியும் என ஜெயகுமார் கூறினார்.

பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி சுமூகமாகவே இருக்கிறது கூட்டணியில் எந்த இடையூறும் இல்லை எனறார. மேலும் கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை-அமைச்சர் ஜெயக்குமார். கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்