இந்த 2 நிபந்தனைகளை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி- மநீம அதிரடி ..!

Makkal Needhi Maiam

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ளனர்.

எப்போதும் போல இம்முறையும் திமுக தேர்தல் அறிக்கை… கனிமொழி எம்பி பேட்டி!

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில்  கமல்ஹாசன் தலைமையில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மவுரியா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது “தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்கள் நலனிலும் மக்கள் நீதி மய்யம் எந்த சமரசமும் செய்துகொள்ளாது.  கமல்ஹாசனின் கொள்கைகளுடனும் சிந்தனைகளுடன் ஒத்து போகிறவர்களிடம் மட்டுமே தான் கூட்டணி அமையும். இந்த இரண்டு நிபந்தனைகளுடன் யாரும் ஒத்துவராவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயங்கமாட்டோம்” என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்