திமுகவுடன் அண்ணன், தம்பி உறவு எல்லாம் முடிந்துவிட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாம்பலம், சைதாப்பேட்டை, வடசென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. வெள்ளத்தை வீடியோ எடுத்து செய்தியாக வெளியிட்டால் மிரட்டுகின்றனர். பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை மறைக்க முயற்சி செய்கின்றனர்.
ஊடகங்களுக்கே இந்த நிலை என்றால் பாமர மக்களின் நிலை என்னவாகும். மழை வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர். முதல்வரின் தொகுதியான கொளத்தூரிலேயே தண்ணீர் நிற்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடாத ஊடக நிறுவனங்களை திமுக அரசு மிரட்டுகிறது. சென்னையில் வெள்ளநீர் வடிந்து விட்டதாக விளம்பரம் செய்கின்றனர்.
ஒருநாள் மழைக்கே சென்னை மிதக்கிறது இன்னும் 6 நாள் மழை இருக்கிறது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டுமே கூட்டணி. திமுகவுடன் அண்ணன், தம்பி உறவு எல்லாம் 1972-லேயே முடிந்துவிட்டது என்றும் திமுக தான் எங்கள் பகையாளி எனவும் குறிப்பிட்டார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…