கூட்டணி வேறு, கொள்கை வேறு – ஆர்.எஸ்.பாரதி

Default Image

காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் .அவரது அறிக்கையில்,7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில்,காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.காங்கிரஸ் தங்களது இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமே தவர மற்றவர் செல்வதை கேட்டு அடம்பிடிக்கக்கூடாது.கூட்டணி வேறு, கொள்கை வேறு என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்