அனைத்து விதமான பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பும் மசோதாவை சட்டபேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து விதமான காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பும் சட்டத்திருத்த மசோதாவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தபின் பேசிய அவர், அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமான சேர்க்கையானது நடைபெறும்.
விண்ணப்பதாரர்களின் தேர்வு முறையில் ஒத்தத் தன்மையை கொண்டு வரும் மற்றும் அத்தகைய பணிகளுக்கு, மாநிலத்தின் கிராமப்புறங்களில் மற்றும் ஒதுக்குப் புறங்களில் உள்ள இளைஞர்களும் விண்ணப்பிப்பதை இயலச் செய்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் அத்தகைய ஆட்சேர்ப்பினை ஒப்படைப்பதின் மூலம் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளில் எழும் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் நிபுணத்துவத்தை பேண முடியும் மற்றும் இது, மேலும் அத்தகைய நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு தொடர்பான, இக்கட்டான வேலைகளிலிருந்து விடுவித்து அவர்களின் அடிப்படை வேலைகளில் கவனம் செலுத்த அதிக நேரம் வழங்குகிறது.
எனவே, அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 321 ஆம் உறுப்பில் வழங்கியவாறு ஒரு சட்டத்தினை மேற்கொள்வதன் மூலம், TNPSC-யிடம் ஒப்படைக்க, அரசானது முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…