தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வருகிற 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடந்த இரு 3 நாளுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் 3 பேரும் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர். பின்னர் 3 பேரும் மனு தாக்கல் செய்ததும் அவர்களுக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி. அன்பழகன், ராஜலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் காலியாக உள்ள பதவிகளுக்கு 6 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…