தமிழகத்தில் இன்று முதல் இவைகளுக்கெல்லாம் அனுமதி – தமிழக அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் இன்று முதல் தனிக் கடைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தினந்தோறும் பாதிப்பும்,  உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் நேற்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி மேலும் 2 வாரங்களுக்கு தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்தது. இதில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, இன்று முதல் சென்னையை தவிர்த்து, பிற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • குறிப்பாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
  • 50% பணியாளர்களை கொண்டு குறைந்தபட்சமாக 20 நபர்கள் கொண்டு ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட ) செயல்பட அனுமதி.
  • நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை சூழ்நிலைக்கேற்ப 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
  • மின்னணு வன்பொருள் உற்பத்தியில் 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
  • கிராமப்புரங்களில் உள்ள நூற்பாலைகள் 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
  • நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்க 30 % பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
  • IT&ITS தகவல் தொழில்நுப்ப நிறுவனத்தில் 50% குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதி.
  • அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானம் மற்றும் சாலை பணிகளுக்கு அனுமதி.
  • கட்டுமான பணிகளுக்கான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி. கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல எந்த தடையும் இல்லை.
  • தனிக் கடைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி.
  • கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி.
  • உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
  • SEZ, EOU, தொழிற் நகரியங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் (ஊரக நகரம்) 50 % பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி. நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
  • மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்கள் கொண்டு தொடர்ந்து செயல்படும்.
  • நகராட்சி, மாநகராட்சி உள்ள மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

2 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

3 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

3 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

4 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

6 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

7 hours ago