தொடர் கனமழை…!சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை…!மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Default Image

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது.அதன்படி சென்னையில் விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதனால்  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி மழையை பொறுத்து நாளை காலை முடிவு செய்யப்படும் என்று  ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது  சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட  ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அவர் கூறுகையில், மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நாளை சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்