மத்திய அரசு தமிழகத்தின் மீது நடத்தும் தாக்குதலை எதிர்கொள்ள திமுகவிடம் தான் சக்தி உள்ளது என பொதுக்கூட்டத்தில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று நடைபெற்று வரும் திமுக கூட்டணி கட்சிகளின் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், பழனிசாமியாக இருந்தாலும், பன்னீர்செல்வமாக இருந்தாலும், அவர்களின் நோக்கம் மக்களை பற்றி கவலையில்லை பணம் தான் ஊழல் தான் என தொடந்து நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு தமிழகத்தின் மீது ரசாயன தாக்குதலையும், கலாச்சார தாக்குதலையும் நடத்தி வருகிறது. இதற்கு ஆளும் அதிமுக துணை செல்கிறது. இந்தி, சம்ஸ்கிருதம், மீத்தேன், நீட் திணிப்பு உள்ளிட்டவற்றை தமிழகத்தில் திணித்து வருகிறது. இதனை எதிர்க்க கூடிய சக்தி திமுகவிடம் தான் உள்ளது என கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, தமிழகத்தின் உரிமைகளை மீட்பதற்கான தேர்தல் இது. புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்து கல்வியை பாழாக்கியுள்ளார்கள். எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் மக்களுடன் இருப்பவன் நான். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியவில்லை, அதனால் அதிமுகவை மிரட்டி, அச்சுறுத்தி அவர்கள் நிழலில் பயணம் செய்ய ஈடுபட்டுள்ளார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடந்த அனைத்து சம்பவங்களும் பாஜகவின் சதிகள் இருப்பது அவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை வைத்தே தெளிவாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
புயல் பாதிப்புகளுக்காக மத்திய அரசு மிக குறைந்த அளவில்தான் தமிழகதிக்ரு நிதி வழங்கி உள்ளது. 37 சதவீத வாக்குகளை பெற்று பாஜக இன்றைக்கு ஆட்சியில் உள்ளதா என்றால், 63 சதவீத மக்கள் பாஜகவை எதிர்த்து பல்வேறு காட்சிகளுக்கு வாக்குகளை பிரித்து போட்டுவிட்டார்கள் என கூறியுள்ளார்.
மேலும், ராகுல் என்னை சகோதரர் என்றே அழைக்க சொல்வார்.,அவர் என் சகோதரர் தான் என்று கூறி தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி போல் இந்திய அளவில் கூட்டணி அமைக்க ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்பு முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…