தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும்-முதலமைச்சர் பழனிசாமி

Default Image

தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி  தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நமது பாரம்பரிய விழாக்களில் சில மறக்கப்பட்டாலும், சில விழாக்கால இன்றும்  நமது தமிழ் மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த விழாக்களில் ஒன்று தான் தமிழ் புத்தாண்டு.நாளை  தமிழ் புத்தாண்டு  கொண்டாடப்பட உள்ளது. 

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி  தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்து செய்தியில் ,தமிழ் புத்தாண்டு மலர்கின்ற இனிய நாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தமிழ் மக்கள் பன்னெடுங்காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்புத்தாண்டாக கொண்டாடி மகிழ்கிறார்கள் .தமிழர்களின் இல்லங்களில் நலமும், வளமும் பெருகட்டும் . தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்