மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு, அதற்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதையடுத்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் தற்போது மத்திய அரசு அறிவித்தபடி, மே 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பின்னர் அதற்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு நெறிமுறைகளில் நகராட்சி, மாநகராட்சி உள்ள மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுபோன்று கிராப்புறங்களில் தனி கடைகளுக்கு காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பணிகளுக்கான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி என்றும் கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல எந்த தடையும் இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…