விவசாயிகள் மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் -திமுக அறிவிப்பு

Default Image

திமுக தலைமையில் நாளை மறுநாள் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் தொடர்பான, அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ‘விவசாயிகளுக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 3 சட்டங்கள்’ குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டம் 21-09-2020 அன்று காலை 10 மணிக்கு சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது” என்று கட்சித்  தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்