காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சிகள் ஒரு மனதாக தீர்மானம்… !

Default Image

மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து கட்சிகளும் சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

சட்டசபை சிறப்பு கூட்டத்தில்  சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், வாரியம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்து முதல்வர் பழனிசாமி பேசுகையில், கடந்த காலங்களை போலவே தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை . காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றார்.திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், இதுவரை தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரை எந்த ஆண்டும் கர்நாடகா வழங்கியதில்லை. வாரியத்தை காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றார்.பின்னர், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுடன் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்