தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். அந்த நிலையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருப்பதாக தெரிவித்தார்.
அந்த வரிசையில்,
1. பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.
2. வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
3. பொதுமக்கள் அதிகளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தளங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
4. அனைத்து வகையான சமய சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு கல்வி கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
5. பொதுமக்களுக்கு விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து மாநிலங்களுக்கு இடையான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்தில் இருந்து பிற பகுதிக்கான ரயில் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. (மத்திய மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம் ரயில் பொதுப்பேருந்து போக்குவரத்து மற்றும் அனுமதி)
6. டாக்ஸி ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.
7. மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.
8. தங்கும் விடுதிகள், (பணியாளர் விடுதிகளை தவிர) தங்கம், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.
9. இறுதி ஊர்வலங்களில் 20 நபருக்கு மேல் பங்கேற்கக் கூடாது
10. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்பொழுதுள்ள நடைமுறைகள் தொடரும்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…