தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளும் இன்று முதல் இயங்கலாம் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளும் இன்று முதல் இயங்கலாம் என தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மே 24 திங்கள் கிழமை அதிகாலை நான்கு மணி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருந்ததாகவும், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தளர்வுகளற்ற பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தளர்வுகள் இல்லாமல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி ஏ.டி.எம், வங்கி சார்ந்த சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளலாம் மற்றும் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தை சேர்ந்த அலுவலகங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நியாயவிலை கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் எனவும் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…