ஆகஸ்ட் 15-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து.!

Default Image

நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு தனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரின் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனையின் மருத்துவ குழு கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், ஆளுநரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், சுதந்திர தினத்தன்று  ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள்  அனைத்தும் ரத்து எனஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று மாலை முதல்வர், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உபசரிக்கும் நிகழ்வு நடைபெறும்.

தற்போது, ஆளுநருக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15 -ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து என ஆளுநர் மாளிகையை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்