தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது.அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.மற்ற மாவட்டங்களில் சதத்தை நோக்கி வெப்பம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பல இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
அக்னி நட்சத்திரம்:
இந்நிலையில்,இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் கொளுத்த உள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைக்கிறது.
10 மாவட்டங்களில் சதம்:
ஏற்கனவே,நேற்று 10 மாவட்டங்களில் வெப்பம் சதமடித்துள்ளது.அந்த வகையில்,அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட்டும்,திருத்தணி மற்றும் திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட்டும்,மதுரையில் 103 டிகிரியும்,ஈரோடு,கரூர்,தஞ்சையில் 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.மேலும்,சேலத்தில் 101 டிகிரி, பாளையங்கோட்டையில் 100 டிகிரி என வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையி,இன்று முதல் கத்தரி வெயில் தொடங்குகிறது.
தமிழகத்தில் மழை:
எனினும்,தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழையும்,நாளை கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளியே செல்ல வேண்டாம்:
இதனிடையே,வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்:”மே மாதத்தில் இயல்பை விட சற்று குறைவாகவே வெப்ப நிலை நிலவும்.அதே சமயம் வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் வேகம் பொருத்து வெப்பநிலை மாறுபடும்.
தமிழகத்தில் காலை 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சூரியக் கதிர்கள் நேரடியாக தாக்கக் கூடும்.இந்த வேளையில் குழந்தைகள், வயதானவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்”,என்று கூறினார்.
வெயிலை சமாளிக்க:
கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுவாக,கோடைக்காலத்தில் நிலவும் கடும் வெயிலை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சியான தர்பூசணி,வெள்ளரி போன்ற நீர்ச்சதுக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.தேவையின்றி மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.குறிப்பாக,தினமும் தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.மேலும்,பிரஸ் ஜூஸ்(பழச்சாறு),இளநீர் போன்றவை பருக வேண்டும்.வெளியில் செல்லும்போது குடையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்வது நல்லது.
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…