மண்டபங்கள், மைதானங்களில் மது விருந்து… அரசின் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!!!

Default Image

திருமண மண்டபங்கள், விளையாட்டரங்குகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளை எதிர்த்து வழக்கு. 

தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் தமிழக அரசின் திருத்த விதிகளை எதிர்த்து வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அரசின் திருத்த விதிகள் பொதுமக்கள் அமைதியாக வாழும் உரிமையை பாதிக்க செய்யும் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அறிவித்துள்ள விதிகளுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மதுவிலக்கு மற்றும் கலால்துறையால் வெளியிடப்பட்ட உரிமை கட்டணத்தை செலுத்தி மதுவை பரிமாறலாம் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்