சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.அதாவது,கடந்த ஜூலை 6 முதல் ‘அல்பெலியன் நிகழ்வு’ எனப்படும் கால நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும்,குறிப்பாக, சூரியனுக்கும்,பூமிக்கும் இடையே உள்ள 9 கோடி கிமீ அளவிலான வழக்கமான தூரம்,அல்பெலியன் நிகழ்வினால் 15 கோடியே 20 லட்சம் கிமீ ஆக அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால்,கடந்த ஆண்டை விட தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவும் என்றும்,இதன்காரணமாக,உடல்வலி,காய்ச்சல்,இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டது.இதனை தவிர்க்க,வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொண்டுநோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும்,இந்நிகழ்வு ஆகஸ்ட் 22 வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில்,சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் நகர்வினால் கடும் குளிர் அலை நிலவும் சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தங்களால் வெளியிடப்படவில்லை என்றும்,இவ்வாறு பரவி வரும் செய்தி தவறானது என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும், தமிழகத்திற்கு குளிர் அலை எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…