அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார்!

Published by
லீனா

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் ஒரே டி-சார்ட் அணிந்து ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக மதுரை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் ஒரே டி-சார்ட் அணிந்து ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக மதுரை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில், இந்த போட்டியை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடங்கி வைத்தனர். முதல் சுற்றில் 33-வது எண் பனியன் அணிந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் களமிறங்கியுள்ளார். 3 சுற்றுகளுக்கு பின் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அந்த நம்பர் உள்ள பனியனை கழற்றி, மற்றொரு நபரிடம் அதாவது கண்ணன் என்பவரிடம் வழங்கிவிட்டு, சுற்றிலிருந்து வெளியேறி உள்ளார்.

இந்நிலையில், அந்த பனியனை அணிந்துகொண்டு களமிறங்கிய கண்ணன் 12 காளைகளை பிடித்துள்ளதாக கணக்கிடப்பட்டு, அவர் முதலிடம் பெற்றதாக  தேர்வு செய்யப்பட்டு கார் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசு கருப்பண்ணன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்கனவே ஹரிகிருஷ்ணன் பிடித்த 7 காளைகள் கண்ணன் பிடித்த 5 காளைகளை சேர்த்து 33ஆம் நம்பர் பினியன் அணிந்தவர் அதிக காளைகளை பிடித்ததாக கணக்கிடப்பட்டு, அவர் முதல் இடம்பெற்றதாகவும் தேர்வு செய்யப்பட்டதாக கருப்பண்ணன் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பதிவேட்டில் 33-வது நம்பரில்  கண்ணன் பெயர்  இடம்பெறவில்லை. அந்த பதிவேட்டில் ஹரிகிருஷ்ணன் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சிறந்த வீரர்கள் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக மதுரை ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியர் விழா கமிட்டியினரை அழைத்து பேசவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

குறுக்க இந்த மழை கௌசிக் வந்தா? அபாயத்தில் முதல் ஐபிஎல் போட்டி? ஆரஞ்சு அலர்ட்!

குறுக்க இந்த மழை கௌசிக் வந்தா? அபாயத்தில் முதல் ஐபிஎல் போட்டி? ஆரஞ்சு அலர்ட்!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…

35 minutes ago

ஊழலை மறைக்க மொழியின் பெயரால் அரசியல் செய்றாங்க! அமித் ஷா பேச்சு!

டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி  முதல் தொடங்கிய நிலையில், வரும்  ஏப்ரல் 6-ஆம் தேதி…

44 minutes ago

ஐபிஎல் 2025 : சென்னை போட்டிக்கு டிக்கெட் வாங்குங்க…மெட்ரோவில் ஃபிரியா பயணம் பண்ணுங்க!

சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…

2 hours ago

இதுதான் அரசியல்., திமுக அழைப்பிற்கு பவன் கல்யாண் ஆதரவு! நாளை வருகை..,

சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…

2 hours ago

இனிமே டான்ஸர் டா… சூர்யாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சனா..ரெட்ரோ பாடல் இதோ!

சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…

3 hours ago

ஐபிஎல்-ல் களமிறங்கும் ‘விலைபோகாத’ கேன் வில்லியம்சன்!

டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…

3 hours ago