அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எந்த இடத்தில் நடைபெறும்.? வெளியான முக்கிய அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

9 வருட பாஜக ஆட்சியே பெரிய பேரிடர் தான்… அமைச்சர் உதயநிதி பதிலடி.! 

அதேபோல இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து,  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட காவல் ஆணையர், மாநகர ஆணையர் மதுபாலன் , ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில்பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு எந்த இடத்தில் நடைபெறும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

ஏனென்றால், முன்னதாக மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் தமிழக அரசு சார்பில் 44 கோடி ரூபாய் செலவீட்டில் 66 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய மைதானத்தில் தான் அடுத்த ஆண்டு 2024 ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அனைவரும் எதிர்பார்க்க காத்திருந்தனர்.

ஆதலால், அடுத்த ஆண்டு 2024 ஜல்லிக்கட்டு போட்டியானது வழக்கமான இடத்தில் நடைபெறுமா அல்லது புதிய மைதானத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே, இந்த ஆலோசனை கூட்டம் முடிவில் அடுத்த வருடம் 2024 ஜல்லிக்கட்டு போட்டியானது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது வழக்கமாக நடைபெறும் இடத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான மூன்று ஆலோசனை கூட்டத்தில் முதல் ஆலோசனை கூட்டம் முடிவடைந்துள்ளது. அடுத்தடுத்த ஆலோசனை கூட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

7 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

7 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

8 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

9 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

10 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

12 hours ago