களைகட்ட தொடங்கியது ஜல்லிக்கட்டு திருவிழா! மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி சோதனைகள் தீவிரம்!

Published by
மணிகண்டன்
  • இந்த வருடம் நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  • இன்று மாடுபிடி வீரர்களுக்கு தீவிர உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் 700 வீரர்கள் இதில்  கலந்துகொண்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகை தின விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரபலம். இந்த ஜல்லிக்கட்டு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு தற்போது  நடைபெற்றுவருகிறது. இந்த மருத்துவ குழுவில் 14 மருத்துவர்கள் உட்பட 50 பேர் உள்ளனர்.

இந்த உடற்தகுதி தேர்வில் சுமார் 700க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இச்சோதனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சரியான உயரம், அதற்கேற்ற உடல் எடை, ரத்த பரிசோதனை ஆகியவை சோதனை செய்யப்பட்டது. மேலும், பிரஷர் அளவு, சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலோ வேறு வியாதிகள் இருந்தாலோ ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது.

சரியான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பாக முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது. இச்சோதனை போக, அடுத்ததாக ஜனவரி 17ஆம் தேதி போட்டி நடைபெறும் நாளன்று மீண்டும் ரத்த அழுத்தம், மது குடித்துள்ளார்களா உள்ளிட்ட சில சோதனைகள் செய்யப்பட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

10 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

11 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

12 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

14 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

14 hours ago

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…

16 hours ago