மாணவ, மாணவிகளை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளது திமுக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அதிகரித்துள்ளோம். தமிழகத்திற்கு நீட் வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. நீட் தேவையில்லை என்பது அதிமுகவின் கொள்கை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து என உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் ஏன் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் சொன்னார். ஏன் கையெழுத்து போடவில்லை?. ஓட்டு வாங்குனால் போதும் என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகளை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளது திமுக. நீட் விலக்கு மசோதா தீர்மானத்துக்கு சட்டமன்றத்தில் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்கும் அதிமுக குழுவை அனுப்பி வைத்தோம் என்றும் குறிப்பிட்டார்.
திமுக எடுக்கும் முடிவை தான் அதிமுக ஏற்கனவே செய்து வந்தது. எங்களை பொறுத்தளவில் நீட் தேவையில்லை என்பதுதான் நிலைபாடு என்றும் அதிமுகவின் நலத்திட்டங்களை திமுக தனது திட்டங்களாக கூறி வருகிறது எனவும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகராட்சியின் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெரும் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…