நீட் தேவையில்லை என்பதே அதிமுகவின் கொள்கை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

மாணவ, மாணவிகளை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளது திமுக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அதிகரித்துள்ளோம். தமிழகத்திற்கு நீட் வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. நீட் தேவையில்லை என்பது அதிமுகவின் கொள்கை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து என உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் ஏன் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் சொன்னார். ஏன் கையெழுத்து போடவில்லை?. ஓட்டு வாங்குனால் போதும் என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகளை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளது திமுக. நீட் விலக்கு மசோதா தீர்மானத்துக்கு சட்டமன்றத்தில் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்கும் அதிமுக குழுவை அனுப்பி வைத்தோம் என்றும் குறிப்பிட்டார்.

திமுக எடுக்கும் முடிவை தான் அதிமுக ஏற்கனவே செய்து வந்தது. எங்களை பொறுத்தளவில் நீட் தேவையில்லை என்பதுதான் நிலைபாடு என்றும் அதிமுகவின் நலத்திட்டங்களை திமுக தனது திட்டங்களாக கூறி வருகிறது எனவும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகராட்சியின் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெரும் என்றும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்