பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததே அதிமுகவின் தோல்விக்கு காரணம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

Default Image

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது தான் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதிமுக பாஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தது. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தால், மீதமுள்ள 16 தொகுதிகளில் பாஜக தோல்வியை தழுவியது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார். மேலும், நாம் பாஜகவை கூட்டணியாக சேர்த்ததால் சிறுபான்மையினர் ஓட்டு நமக்கு கிடைக்கவில்லை. எனவே தான் தோல்வியடைந்து விட்டோம், பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
UP CM Yogi adityanath
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains