அதிமுக-வின் முதல் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், மக்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்படி பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அந்தவகையில், அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில், தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சுப்பிரமணி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள் அதிமுக-வின் முதல் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் முக கவசம் அணிந்து இருந்தாலும், தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை.
இதனையடுத்து, சுப்பிரமணி என்பவர் தொடர்ந்த மனுவுக்கு, ஜனவரி 6-ம் தேதிக்குள், சுகாதார செயலாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…