அதிமுக அரசின் நீட் எதிர்ப்பு வெறும் நாடகம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பெயர்களையும் சட்டமன்றத்தின் இரங்கல் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
நீட், அதனால் மாணவர்கள் தற்கொலை; புதிய கல்விக் கொள்கை; சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை – இவை குறித்தெல்லாம் சபையில் பேசி விளக்கம் பெற வேண்டும் என்று கவன ஈர்ப்புத் தீர்மானங்களாக எழுதி கொடுத்து இருக்கிறோம்.நீட் தேர்வு குறித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள். கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திலும் தீர்மானம் இயற்றினார்கள். சட்டமன்றத்திலும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதெல்லாம் ஒரு நாடகம்.மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம்.
முதலமைச்சர், அமைச்சர்கள் டெல்லியில் பிரதமரையோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தவில்லை . மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு அடிமை ஆட்சியாகத்தான் இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…