அதிமுக தங்கள் செய்த ஊழல் காரணமாக திமுகவை எதிர்க்காது…! – மகா சுசீந்திரன்

Default Image

மதுரை புறநகர் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் சோழவந்தானில் நடைபெற்றது. மாவட்டத் செயலாளர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பேசிய மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மகா சுசீந்திரன் அவர்கள், அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்து காணப்பட்டதால், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உள்ளிட்டோர் திமுக அரசுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். எனவே,  திமுகவை எதிர்த்து ஒரு அறிக்கை கூட விடமுடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், திமுகவை எதிர்த்து அவர்கள் செயல்பட்டால் சிறை செல்ல நேரிடும், எனவே அடுத்த வாய்ப்பு பாஜக-வுக்கு தான் என்று அவர் தெரிவித்துள்ள நிலையில், மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மகா சுசீந்திரன் அவர்களின் பேச்சு, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்