சமீபத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் என்று கூறிய நிலையில், இதற்கு அமைச்சர்கள் அவ்வப்போது பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தேர்தலைப் பொருத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று, பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், ஆறு வரும்பொழுது தான் அதை நாம் கடக்க முடியும். முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தான் கூடி முடிவெடுப்பார்கள் என்றும், தேர்தலுக்கு பின் பெரும்பான்மையை பொறுத்து முதல்வர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…