சசிகலாவை சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் கூறியது சரி தான் – அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி பிரபாகர்

Default Image

சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரிதான் என்று ஜே.சி.டி பிரபாகர் பேட்டி.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு என கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது சரி தான் என்றும் ஓபிஎஸ்-யின் நிலைப்பாடு தான் எனக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தர்மயுத்தம் மூலம் இணையும்போது யாரையும் சேர்க்கக்கூடாது என சொன்னதை இப்போது ஒப்பிட முடியாது என்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே எந்தவித கருத்து வேறுபாடு இல்லை என நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டும் காரணமில்லை, உடன் இருந்தவர்களும் தான். அதிமுக தொண்டர்கள் சசிகலாவை அவரது சுற்றுப்பயணத்தில் சந்திக்கமாட்டார்கள் என்றும் அதிமுகவின் எதிர்கால நலனை சிந்திக்கக்கூடிய தலைமை கழக நிர்வாகிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலாவை சேர்ப்பது குறித்த ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்துக்கு ஜெயக்குமார், கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள் அடுத்தடுத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி, அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nayinar Nagendran
CM Break fast Scheme
china donald trump
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop