நாளை அதிமுக இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் – தலைமை அறிவிப்பு!

Published by
Edison

அதிமுக இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் நாளை மற்றும் நாளை மறுதினம்(22,23 ஆம் தேதிகளில்) நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ மாவட்டங்களைச்‌ சேர்ந்த,ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள்‌, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகளுக்கான இரண்டாவது கட்ட உட்கட்சி தேர்தல் நாளை மற்றும் நாளை மறுதினம் (வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில்) நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“அதிமுக இரண்டாவது கட்ட அமைப்பு தேர்தல் வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக இரண்டாம்‌ கட்ட கழக அமைப்புத்‌ தேர்தல்கள்‌ வருகின்ற 22, 23 ஆகிய தேதிகளில்‌ நடைபெற உள்ளதையொட்டி, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ கீழ்க்கண்ட மாவட்டங்களைச்‌ சேர்ந்த, ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக்‌ கழக நிர்வாகிகள்‌,பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கு மட்டும்‌, மாவட்டத்‌ தேர்தல்‌ பொறுப்பாளர்கள்‌ மற்றும்‌ ஒன்றிய, பேரூராட்சி, நகரம்‌ மற்றும்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளுக்கான தேர்தல்‌ ஆணையாளர்கள்‌ பட்டியல்‌ இத்துடன்‌ வெளியிடப்படுகிறது.

கழக அமைப்புத்‌ தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர்‌ பட்டியல்‌ (கழக உறுப்பினர்கள்‌), மினிட்‌ புத்தகம்‌, விண்ணப்பப்‌ படிவம்‌, ரசீது புத்தகம்‌, வெற்றிப்‌ படிவம்‌ முதலானவை சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்‌ தேர்தல்‌ பொறுப்பாளர்கள்‌ அவற்றைப்‌ பெற்று, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும்‌ மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல்‌ ஆணையாளர்களிடம்‌ வழங்கி, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழக அமைப்புத்‌ தேர்தல்களை முறையாக நடத்திட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறோம்‌. கழக அமைப்புத்‌ தேர்தல்கள்‌ சுமூகமாக நடைபெறும்‌ வகையில்‌, மாவட்டத்‌ தேர்தல்‌ பொறுப்பாளர்கள்‌ மற்றும்‌ தேர்தல்‌ ஆணையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச்‌ சேர்ந்த கழக நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌ முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்கொள்கிறோம்‌”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

admkadmk

அதிமுக  உட்கட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது.அதன்படி, முதற்கட்டமாக கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் 19 மாவட்டங்களில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

13 hours ago
சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

13 hours ago
“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

14 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

14 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

16 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

17 hours ago