2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியே மலரும் என்பதையே ரஜினி அதிசயம் நிகழும் எனச் சொல்லியுள்ளார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கமல் 60 விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகத்தின் முதலமைச்சராக பழனிசாமி ஆகுவர் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என்று தெரிவித்தார்.மேலும் அதிசயம் இன்று நடக்கும் ,நாளை நடக்கும் என்று தெரிவித்தார்.இவர் கூறிய இந்த அதிசயம் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியே மலரும் என்பதையே ரஜினி அதிசயம் நிகழும் எனச் சொல்லியுள்ளார்.
எந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை. ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும் என்று தெரிவித்துள்ளார் .
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…