அதிமுகவின் பொதுக்குழு,செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில்,கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன்,சுரேன்,கேசி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடுத்தனர்.அதில்,கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கவும்,புதிதாக பதவிகளில் நியமிக்கவும் தடை விதிக்க கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்ட நிலையில்,இது கட்சி விதிக்கு எதிரானது.எனவே, ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் தந்து நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும்,பொதுக்குழு,செயற்குழு கூட்டங்களை ஓபிஎஸ்,இபிஎஸ் நடத்த தடை விதிக்கவும் மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில்,இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.அதே சமயம்,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சூரிய மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவையும் அவசர வழக்காக சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று விசாரணை செய்கிறது.
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…
சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள்.…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ஹைதராபாத் : பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும்…
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…