அதிமுக கலவர வழக்கு.! 100 நபரை அடையாளம் கண்டது சிபிசிஐடி.! விரைவில் விசாரணை.!

Published by
மணிகண்டன்

ஜூலை 11ஆம் அதிமுக அலுவலக வளாக பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து 100 நபர்களை சிபிசிஐடி போலீசார் கண்டறிந்து உள்ளனர். 

கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் ஒரு பெரிய கலவரமே நடைபெற்றது. அன்றைய தேதி தான் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் அதிமுக கழக வளாகத்தில் கற்களால் மோதிக்கொண்டனர். அன்று தான் இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடைபெற்று இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

பொதுக்குழு நடைபெற்ற அந்த ஜூலை 11ஆம் தேதி ஏற்பட்ட கலவரத்தில், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. கார் காண்ணாடிகள் உடைக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. கற்களால் இருதரப்பினரும் எதிரெதிரே தாக்கி கொண்டனர்.

இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே அதிமுக அலுவலகத்திற்கு 20 சிபிசிஐடி போலீசார் சென்று கைரேகை, சிசிடிவி போன்றவற்றை ஆராய்ச்சி செய்தனர்.

அதன்படி தற்போது 100 நபர்களை சிபிசிஐடி போலீசார் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். யார் முதலில் கல்லெறிந்தார்கள். யார் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என்பதை கண்டறிந்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago