உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி, மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. காஞ்சிபுரம் 11, செங்கல்பட்டு 14, ராணிப்பேட்டை 9, விழுப்புரம் 24, தென்காசி மாவட்டத்தில் 12 இடங்களுக்கு மாவட்ட ஊராட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி 18, விழுப்புரம் 11, திருப்பத்தூர் 12 இடங்களுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதேபோன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து…
வாஷிங்டன்: டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி வரிகளை விதித்ததாக அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவற்றை உடனடியாகத் தடை செய்ய…
சென்னை : மேற்கு வங்கம் - வங்கதேச கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…