அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கேசி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை என அதிமுக மனு.
கேசி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கேசி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் உரிய விதிகளை பின்பற்றி தான் அவரை நீக்கியுள்ளோம். தன்னை நீக்கியது செல்லாது என 3 ஆண்டுகளுக்கு பின் அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இதனால் அடிப்படை உறுப்பினராக இல்லாத அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ரத்து செய்யக்கோரி கேசி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார். இதனிடையே, அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், கேசி பழனிசாமி ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது. எனவே, கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆகியோர் அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…