ஈபிஎஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு.
அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்றி, அதன் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விரும்பத்தகாத சம்பவங்கள் தவிர்க்கும் வகையில், கட்சி தொண்டர்களை ஒரு மாதத்துக்கு அனுமதிக்கக்கூடாது என்றும் அலுவலகத்திற்கு போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகம் சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, ஓபிஎஸ்-க்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கில் ஈபிஎஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் கூறுகையில்,
அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு. இந்த வழக்கின் உத்தரவு மேல்முறையீடு செய்ய தகுந்தது என்றும் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…