அதிமுக சாதிக்கட்சி இல்லை.. ஓபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – செல்லூர் ராஜூ

Default Image

அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் காசுக்காக விலைபோக மாட்டார்கள் என செல்லூர் ராஜூ பேட்டி.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்லூர் ராஜூ, அதிமுக சாதி ரீதியான கட்சி அல்ல, சாதி அடிப்படையில் புதிதாக பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை. அதிமுகவில் சாதி, மதம் பார்ப்பதில்லை. அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் காசுக்காக விலைபோக மாட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஏட்டிக்கு போட்டியாக செயல்பட கூடாது.

பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்போம், எடப்பாடி பழனிசாமியை, ஓபிஎஸ் சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதிமுக தொண்டர்களால் பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார். அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன். தொண்டர்களின் புனித ஸ்தலமாக அதிமுக தலைமை அலுவலகம் விளங்குகிறது.

நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையின் பேரில் கட்சியின் பலம் நிர்ணயிக்கப்படாது என தெரிவித்தார். இதனிடையே, அதிமுகவில் அமைப்புச் செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 11 பேர் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்