ADMK
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் இன்று தொடங்கிய நிலையில், பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினரக்ள் வெளிநடப்பு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கிய அதிமுகவினர், நேற்று கருப்பு சட்டை அணிந்து கொண்டு வருகை தந்திருந்தனர்.
இவ்விவகாரம் குறித்துப் பேச வாய்ப்பு வழங்கப்படும் எனச் சபாநாயகர் கூறியும் கேள்வி நேரத்தின்போது அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, இன்றும் சட்டமன்றத்தில் 2-வது நாளாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்.
நேற்றை போல, இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். கேள்வி நேரம் முடிந்த பிறகு, எந்த பிரச்னையை பற்றி நீங்கள் கேள்வி எழுப்பினாலும் அதற்கு நான் அனுமதி தருகிறேன். எதிர்க்கட்சி என்ற முறையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு தருவேன். நீங்கள் தாராளமாக பதிவு செய்யலாம்.
4 வருடங்களாக முதலமைச்சராக இருந்த உங்களுக்கு சபை நடவடிக்கைகள் அனைத்தும் நன்றாகவே தெரியும். எனவே, நினைத்த நேரத்தில் நினைத்த தொகுப்பை பற்றி பேசும் இடம் இது இல்லை. நேரம் கொடுப்போம் அப்போது பேசுங்கள்” என்று சபாநாயகர் அப்பாவு கூறியும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ச்சியாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், ‘நீதி வேண்டும்’….‘நீதி வேண்டும்’ என முழக்கமிட்டும், ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டு கொண்டே அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…
சென்னை : அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றபோது அதில் முன்னாள் அமைச்சர்…
டெல்லி : ஆரம்ப காலங்களில் ஒரு நாள் போட்டிகளில் ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே அடிக்கப்பட்டு காணாமல் போனது என்றால்…