அதிமுக எம்எல்ஏ கூட்டத்தில் வாக்குவாதம்..?

Default Image

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 65 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர்செல்வத்தை நியமிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்