பாமகவுடன் பேச்சுவார்த்தையும் தொகுதிப்பங்கீடு முடிவடைந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த அதிமுக அமைச்சர்கள்.
தமிழக சட்டப்பேரவை காலம் நிறைவடைவதை அடுத்து, வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தங்களின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். இந்நிலையில் பாமகவுடன் பேச்சுவார்த்தையும் தொகுதிப்பங்கீடு முடிவடைந்த நிலையில், அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி உள்ளிட்டோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்துள்ளனர்.
தேர்தல் தேதியை அறிவித்த பிறகு சட்டப்பேரவை கூட்டணியை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வரும் நிலையில், விஜயகாந்த்துடன் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது என்று கூறப்படுகிறது. விரைவில்தேமுதிகவை அழைத்துகூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…