அதிமுக தலைமையில்தான் கூட்டணி -அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

வருகின்ற  சட்டமன்ற  தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி திருவாருரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் , பாஜக தலைமையில் கூட்டணி என சொல்லப்படுகிறதே ? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதில் அளித்த முதல்வர், தேர்தல் வரட்டும், கூட்டணியில் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை.தேர்தல் வரும்போது தான் கூட்டணி பற்றியும் , தலைமை பற்றியும் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், வருகின்ற சட்டமன்ற   தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். மக்களவை தேர்தலில் எப்படி கூட்டணி அமைத்தோ அதே போன்று தான் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்