#BREAKING: அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் காலமானார்…!

உடல்நலக் குறைவால அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் காலமானார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் அதிமுக அவைத்தலைவராக மதுசூதனன் செயல்பட்டு வந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மதுசூதனன் செயல்பட்டார். வயது முதிர்வால் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி தண்டையார் பேட்டை வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். மதுசூதனன்1991இல் ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக இருந்தவர், மதுசூதனன் இருக்கும் வரை அவர்தான் அவைத் தலைவர் என ஜெயலலிதா அறிவித்தது இறுதிவரை பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.