மோசடி புகாரில் அதிமுக பிரமுகர் கைது!

Default Image

பண மோசடி புகாரில் அதிமுக பிரமுகர் கரூர் அன்புநாதனை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.

கரூரில் ரியல் எஸ்டேட் அதிபரும், அதிமுக பிரமுகருமான அன்புநாதனை ரூ.6 கோடி பண மோசடி புகாரில் கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரமத்திவேலூரை சேர்ந்த எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ஒருவருடன் பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக  கூறப்படுகிறது.

எலெக்ட்ரோக் கடை உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து கரூர் அடுத்து வெள்ளியணை பகுதியில் அன்புநாதன் கைது செய்யப்பட்டார். அரவங்குறிச்சி தேர்தலின்போது அன்புநாதன் வீட்டில் வருமான வரி சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2016-ல் அன்புநாதன் தொடர்புடைய இடங்களில் சொத்து ஆவணங்களும், நகைகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்