அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அடிமை இல்லை -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

Default Image

அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அடிமையாக இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குஎண்ணிக்கை வருகின்ற மே 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  வாக்கு எண்ணிக்கை தேதி நெருங்கி வரும் நிலையில், இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி , தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் மீண்டும் அதிமுக 3-வது முறையாக ஆட்சியமைக்கும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்பார். கொரோனாவை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அடிமையாக இல்லை என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்