ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவேரா மறைவுக்கு பிறகு, அத்தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இடைத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்காக ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது பேசிய அவர் ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் மத்திய அரசை எதிர்த்து தான் போட்டி இடுகின்றோம்.அதிமுக மத்திய அரசுக்கு அடிமை சேவகம் செய்யக்கூடியது என்று கடந்த காலங்களில் திமுக பதியவைத்தது ,ஆனால் இந்த தேர்தலில் அது எடுபடாது.
ஏனென்றால் அவர்களை எதிர்த்து நின்றுதான் நாங்கள் இங்கு எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்.பலதரப்பட்ட மக்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் அதனை நாங்கள் தடை செய்ய முடியாது.மற்றபடி இந்த இடைத்தேர்தலில் அதிமுக தனது சொந்தக்காலில் தான் நின்று தான் போட்டியிடுகிறது அதை எவராலும் மறுக்க இயலாது.
எங்களுக்கு ஆதரவு அளிப்பவர்களின் சித்தாந்தங்களை வைத்து எங்களை எடைபோட வேண்டாம் என முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் செய்தியாள்களிடம் தெரிவித்தார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…