அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு – ஓபிஎஸ் பேனர் கிழிப்பு;பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம்?..!!

Published by
Edison

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும்,தவறாமல் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தலைமைக் கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.ஆனால்,அதில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் பெயரில்லாமல் தலைமை நிலையச் செயலாளர் என்ற பேரில் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து,ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெற உள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்தார். மேலும்,சட்டத்திற்கு புறம்பாக கூட்டப்படவுள்ள இக்கூட்டத்தில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால் அது ஒருங்கினைப்பளர்கள் மற்றும் தொண்டர்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்திருந்தார்.

இதனால்,கூட்டத்திற்கு முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், விஜய பாஸ்கர்,செங்கோட்டையன்,வளர்மதி,சீதா செல்லப்பாண்டியன், தம்பிதுரை உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.மேலும், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி, ஜெயக்குமார்,சிவி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனையடுத்து,அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்து ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்டுள்ளது.ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பேனர்களை கிழித்தெறிந்ததால் தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில்,அலுவலகத்திற்கு வெளியே ஈபிஎஸ் பொதுச்செயலாளராக வேண்டும் என தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே,அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்,கேபி முனுசாமி அல்லது திண்டுக்கல் சீனிவாசன் அப்பதவியில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக,ஓபிஎஸ்-இன் அதிமுக பிரச்சார வாகனத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவர்களின் படங்கள் நேற்று அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago